விவசாயி வெட்டி கொலை-தகராறை தடுக்க சென்றவர் வெறிச்செயல்

பொள்ளாச்சி அருகே கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையை தடுக்க சென்றவரை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவர் வெட்டியதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2024-02-01 06:40 GMT

பைல் படம் 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் சித்தாண்டீஸ்வரர் கோயில் அருகே வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன் (59). இவரது மனைவி சரஸ்வதி (48). கடந்த சில நாட்களுக்கு முன்பு சரஸ்வதியின் பெற்றோர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை விற்று 27 லட்சம் ரூபாயை சரஸ்வதி இடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.இந்த தொகையில் கணவர் ராதாகிருஷ்ணனுக்கு பங்கு தராமல் சரஸ்வதி இருந்ததாகவும் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் தோட்டத்தில் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் சிவக்குமார் (36) என்பவர் அங்கு சென்று இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.அப்போது ராதாகிருஷ்ணன் தன் வீட்டில் இருந்த அரிவாளால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் ராதாகிருஷ்ணனிடம் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டியதில் இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே ராதாகிருஷ்ணன் வெட்டியதில் படுகாயம் அடைந்த சிவக்குமாருக்கு சிகிச்சை அளிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கணவன், மனைவி இடையேயான தகராறை தடுக்க சென்றவரே கொலை செய்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News