தந்தையின் பெண்ணாசையால் இரு குழந்தைகள் உயிரிழப்பு - சேலத்தில் கொடூரம் !!

Update: 2024-10-16 11:10 GMT

 அக்கா தம்பி கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் அருகே அக்கா, தம்பியை கழுத்தறுத்து கொன்ற சித்தப்பாவை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள கூட்டாறு ஒடுவன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). விவசாயி. இவரது மனைவி சித்ரா. இவர்களது குாந்தைகள் நவீனா (17), சுகன் (14). நவீனா பிளஸ்2வும், சுகன் 9ம் வகுப்பும் படித்து வந்தனர். சித்தப்பா மகனான தம்பி தனசேகரன் (35), என்பவர் நேற்று முன்தினம் அக்கா தம்பி இருவரும் பூ பறிக்க தோட்டத்திற்கு சென்ற போது 2 குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து சுகனை தனசேகரன் தாக்கிவிட்டு கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார். அப்போது தம்பியின் சத்தம் கேட்டு நவீனா சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளார். அங்கு தனசேகரன் தம்பியை கொலை செய்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். நவீனா பார்த்து விட்டதால் அவரையும் தனசேகரன் கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கு வந்த ராஜாவையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தப்பி ஓடிய தனசேகரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தனசேகரனுக்கு ஜனனி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராஜாவின் வீடும், தனசேகரன் வீடும் அருகருகே இருக்கிறது. தனசேகரனின் மனைவியுடன் ராஜா தவறான உறவு வைத்துக்கொள்ள முயற்சிகள் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையும் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதுகுறித்து ஜனனி, கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன், அரளிப்பூ பறிக்க வந்த குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் என விசாரனையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் தனசேகரன் மட்டுமே ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடித்து வைத்துள்ளனர். ஆனால் தனசேகரின் மைத்துனர் கார்த்தி என்பவருக்கும் தொடர்பு உள்ளது என்பதால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள், திடீரென நுழைவு வாயில் முன்பு அமர்ந்து உயிரிழந்த குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் 2 குழந்தைகளின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தந்தையின் பெண்ணாசையால் இரு குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News