கல்லூரி மாணவரை மிரட்டி பொருட்களை திருடி சென்ற இருவர் கைது.

கல்லூரி மாணவரை மிரட்டி பொருட்களை திருடி சென்ற இருவர் கைது.

Update: 2024-01-09 05:02 GMT

கல்லூரி மாணவரை மிரட்டி பொருட்களை திருடி சென்ற இருவர் கைது.

கோவை:கிருஷ்ணகிரி மாவட்டம் சோழராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்குமார்(23).ஈச்சனரி அருகில் உள்ள அய்யப்பன் நகர் பகுதியில் வாடகை அறையில் நண்பர்களுடன் தங்கி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கருப்புசாமி என்பரை அறையில் தங்க அனுமதித்துள்ளார்.அப்போது சுந்தராபுரம் மாச்சம்பாளையம்பம் அம்மனி அம்மாள் காலனி பகுதியை சேர்ந்த கவுதம் என்பவர் நண்பர்களுடன் வந்தவர் கருப்புசாமியை மிரட்டி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அறை காலி செய்ய தேஷஸ்குமார் கூறியதை அடுத்து கருப்புசாமி வெளியேறி நிலையில்சம்பவத்தன்று ஏற்கனவே கருப்புசாமிக்கு மிரட்டல் விடுத்த கவுதம் அவரது நண்பர் கமலலண்ணன் ஆகிய இருவரும் தேஷஸ்குமாரின் அறைக்கு வந்து கருப்புசாமி குறித்து கேட்டுள்ளனர்.அவர் மூன்று மாதத்திற்கு முன்பே அறையை காலி செய்துவிட்டு சென்று விட்டதாகவும் தற்போது அவர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தேஷஸ்குமார் கூறியுள்ளார்.இந்த நிலையில் கவுதம் மற்றும் கமலக்கண்ணன் இருவரும் கத்தியை காட்டி மிரட்டி இரண்டு லேப்டாப்,மூன்று செல்போன்களை பறித்து சென்றுள்ளனர்.இதுகுறித்து தேஷஸ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சுந்தராபுரம் போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடபட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News