பேரணாம்பட்டு அருகே சரக்கு வேனில் மணல் கடத்திய இருவர் கைது

பேரணாம்பட்டு அருகே சரக்கு வேனில் மணல் கடத்தி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-04-22 15:11 GMT

காவல் நிலையம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் அரவட்லா கூட்ரோட்டில் பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன், ஏட்டு பிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்தவழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி விசாரணை நடத்தினர். வேனில் இருந்தவர்கள் நெல் மூட்டைகள் ஏற்றி செல்வதாக கூறினர்.

சந்தேகமடைந்த போலீசார் வேனின் பின்புறம் மூடப்பட்டிருந்த தார்பாயை திறந்து பார்த்த போது பத்தலப்பல்லி மலட்டாற்றிலிருந்து ½ யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சரக்கு வேனை பறிமுதல் செய்து, டிரைவர் பேரணாம்பட்டு வீ.கோட்டா ரோடு சிவராஜ் நகரை சேர்ந்த கார்த்தி (40), பத்தலபல்லி கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கிளீனர் மணிமாறன் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News