மூதாட்டி மீது இளைஞர் ஓட்டிய டூ வீலர் மோதி விபத்து.

நடந்து சென்ற மூதாட்டி மீது இளைஞர் ஓட்டி வந்த டூ வீலர் மோதி விபத்து;

Update: 2023-12-17 16:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம், வெங்கமேடு, விவிஜி நகர், காமராஜர் தெருவில் உள்ள இரண்டாவது தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் மனைவி சாரதா வயது 74. இவர் டிசம்பர் 15ஆம் தேதி மாலை 6:30-மணி அளவில், குளத்துபாளையத்திலிருந்து ஏ1 தியேட்டர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில், கரூர் மாவட்டம், மன்மங்கலம் நெரூர் அருகே உள்ள தெற்கு நெரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் வயது 24 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற சாரதா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாரதாவுக்கு வலது கால் மற்றும் கன்னத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாரதா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ஜெகநாதன் மீது வெங்கமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் 
Tags:    

Similar News