போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

பிளஸ்1, மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-26 06:32 GMT

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள குருநாதநாயக்கனூர் கோவில்பட்டியை சேர்ந்த கருணாகரன். இவர், பிளஸ்-1 மாணவியை காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கருணாகரன் கடத்திச்சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வேடசந்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்து மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News