ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் ஸ்பான்ச் மூலம் தேசியக்கொடி வரையும் சாதனை நிகழ்ச்சி

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் ஸ்பான்ச் மூலம் தேசியக்கொடி வரையும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-08-14 07:32 GMT
இந்திய சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் ஸ்பான்ச் மூலம் தேசியக்கொடி வரையும் ஜாக்கி புக் ஆப் ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமையில் நடந்தது. இதில் 140 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 78 நிமிடம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. போட்டியாளர்கள் நிர்ணயம் செய்த கால அளவை விட குறைந்த நேரத்தில் தேசியக்கொடியை வரைந்து சாதனை செய்தனர். மிக குறைந்த நேரத்தில் வரைந்து சாதித்தவர்களுக்கும, பங்கேற்ற மாணவ, மாணவியருக்கும் கோப்பை, கேடயம், நினைவு பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்களை நிர்வாகிகள் வழங்கி வாழ்த்தினர். பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Similar News