அன்னவாசல் அடுத்த முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.