திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையே! மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு.

திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையே! மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு.

Update: 2024-09-23 09:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையே! மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் உள்ள சிவலிங்க ஆசாரியர் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி சாருலதா வயது 49. இவருக்கும் கந்தசாமிக்கும் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட குடும்ப தகராறில், பாத்ரூம் கழுவும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார் சாருலதா. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தனது மனதில் ஏற்பட்ட காயங்களை போக்குவதற்காக, வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 7 மணி அளவில் சென்றுள்ளார். மனம் உருகி பிரார்த்தனை செய்த பிறகு, சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். மீண்டும் அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சாருலதாவின் தந்தை பத்மராஜ் வயது 76 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சாருலதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Similar News