பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஒரு மாணவர் பலி மற்றொரு மாணவர் மருத்துவமனையில் அனுமதி.,

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஒரு மாணவர் பலி மற்றொரு மாணவர் உடலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.,

Update: 2024-09-23 12:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஒரு மாணவர் பலி மற்றொரு மாணவர் உடலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி., பொள்ளாச்சி.,செப்டம்பர்.,23 கோவை ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 6 பேர் வால்பாறையை சுற்றிப் பார்க்க சுற்றுலா வந்துள்ளனர்., நிலையில் வால்பாறை பகுதியில் இருந்து சோலையார் டேம் செல்வதற்காக ஆறு பேரும் மூன்று இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர் அப்போது ஸ்டாண் மோர் எஸ்டேட் பகுதியில் உடல் நலம் சரியில்லாத இருந்த ஒருவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரும்பொழுது எஸ்டேட்டுக்கு சொந்தமான ஆம்புலன்ஸும் இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர்., இதில் ஸ்ரீகாந்த் 20 வயது மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மேலும் காயங்களுடன் இருந்த இன்னொரு மாணவனை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்., மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவன் ஸ்ரீகாந்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்., இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி ஒரு மாணவன் பலியானது சக மாணவர்களிடையும் அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

Similar News