உடுமலையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-09-23 12:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இன்று சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது உட்கோட்ட தலைவர் மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் மாநில நெடுஞ்சாலை அமைப்பதால் 400 மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்படும் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலை துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் , இணைச்செயலாளர் செல்லமுத்து, நெடுஞ்சாலை கூட்டமைப்பின் மண்டல தலைவர் வைரமுத்து, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன், அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News