உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Update: 2024-09-19 16:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உடுமலையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று உடுமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தின் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் பால்வாசகம் தலைமை வகித்தார்.வட்ட பொருளாளர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார்.அப்போது டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் உள்ள இடர்பாடுகளை சுட்டிக்காட்டியும்,பணிகளை அவசர கதியில் செய்வதற்கு நிர்பந்தம் செய்யும் வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்தும் நிர்வாகிகள் பேசினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உட்பட 50 நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News