![குமரி: கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை குமரி: கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை](https://king24x7.com/h-upload/2025/01/30/787703-136538_1738214376578_1738775172470_1739102497247_1739419368762.webp)
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி ஜெயராணி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதற்காக ஜெயராணி சுய உதவி குழுவில் பணம் கடன் பெற்றதாக தெரிகிறது. வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியும் கட்ட முடியாமல் ஜெயராணி தவித்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராணிக்கும் கடன் கொடுத்த சுயஉதவிக் குழுவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரணியல் போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து ஜெயராணி விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கை அறையில் கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.