அண்ணா நகரில் 5 கிராம் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது. காவல்துறை வழக்கு பதிவு.

அண்ணா நகரில் 5 கிராம் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது. காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-09-30 12:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அண்ணா நகரில் 5 கிராம் கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சுபாஷினிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 29ஆம் தேதி மாலை 5 மணி அளவில், வேலாயுதம்பாளையம் டி என் பி எல் சாலையில் உள்ள அண்ணா நகர், பஸ் ஸ்டாப் அருகே சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, மேல உரத்தை பகுதியைச் சேர்ந்த சிவதேவன் மகன் ரூபன்குமார் வயது 25 என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பதுக்கி வைத்திருந்த ஐந்து கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து ரூபன் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Similar News