மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் கடமான்
ஒட்டன்சத்திரத்தை அருகே பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-18 10:26 GMT
இறந்து கிடக்கும் கடமான்
ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னர் விருப்பாட்சி கால்நடை மருத்துவர் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.