மேலப்பாளையத்தில் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி சார்பாக மேலப்பாளையத்தில் உள்ள தனியார் மஹாலில் இன்று (மார்ச் 13) சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் கலந்து கொண்டனர்.