விருதுநகரில் தாக்குதல் சம்பவம் : போலீசார் விசாரணை

விருதுநகரில் ராமநாதன் என்பவரை தாக்கிய கார்த்திக் குமார் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

Update: 2024-06-03 09:10 GMT

காவல் நிலையம்

விருதுநகர் நேருஜி நகரில் ராமநாதன் என்பவரை தாக்கிய கார்த்திக் குமார் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் வேலுச்சாமி நகர் பகுதியைச் சார்ந்தவர் ராமநாதன் இவர் ஆடு மாடு கோழி நாய்கள் என ஒருங்கிணைந்த பண்ணை வைத்து விவசாயம் செய்து வருவதாகவும் இவர் விருதுநகர் பாண்டியன் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று ஒன்றாம் தேதி மதியம் 12 மணியளவில் ராமநாதன் நேருஜி நகர் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த காட்டுக்குமார் ராமநாதனை முறைத்து பார்த்து வம்பு இழுத்து தர குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராமநாதன் கார்த்திக் குமாரை அடித்ததாகவும் அதை தொடர்ந்து காட்டி குமார் அங்கு இருந்த ஒர்க் ஷாப்பில் இருந்த டூல்ஸ்களை எடுத்து ராமநாதரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த ராமநாதன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து ராமநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News