கொல்லங்கோடு;

Update: 2025-01-28 03:46 GMT
  • whatsapp icon
குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின் (21). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர்  பழக்கமானார்.  பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டு நண்பர்களாக பழகினர். ஒரு கட்டத்தில் ஜெர்லின் மாணவியை தனது கிராமத்திற்கு அழைத்து சென்று அங்கு ஒரு பாழடைந்த கட்டத்தில் வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பராத்காரம் செய்துள்ளார். மீண்டும்  பாலியல் தொழிலை அதிகரிக்கவே மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.       இது குறித்து அறிந்த மாணவியின் தாயார் உடனடியாக குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஜெர்லின் மீது போக்சோ  பிரிவின்  கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.       இதனை அறிந்தது ஜெர்லின் தலைமறைவானார். இந்த நிலையில் ஒன்றரை மாதம் கழித்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News