அமைச்சர் சு.முத்துசாமியுடன் புதிய திராவிட கழக தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் சந்திப்பு!!

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புதிய திராவிட கழக தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.;

Update: 2025-10-24 08:10 GMT

raj gounder

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புதிய திராவிட கழக தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார். புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி - ஆறாவது மாநில மாநாடு வரும் 30-11-2025 அன்று மொடக்குறிச்சி எழுமாத்தூரில் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் நல்லாசியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில், தலைமை சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி மாநாட்டை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்க உள்ளனர். அதை முன்னிட்டு, மாநாட்டிற்கான அழைப்பிதழை, இன்று (24.10.2025) காலை ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புதிய திராவிட கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கழக தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். 

Similar News