வயலூர் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாக்கு சேகரிப்பு

வயலூர் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-01 10:45 GMT

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வயலூர் ஊராட்சியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன்,

கருப்பையா, மாணிக்கம், கூட்டுறவு தலைவர் மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், ஒன்றிய கவுன்சிலர் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், கிளை செயலாளர் சுவாமிநாதன், சிறுவாலை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் ராஜ், சிறுவாலை செல்வம் மற்றும் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொதுமக்கள் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கூறுகையில். தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்திட மாணவர்களுக்கு மடிக்கணினி பெற்று தந்திட, தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை அமோக வெற்றி பெற செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News