தமிழகத்தில் பாஜ., ஒரு பூஜ்யம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் பாஜ., ஒரு பூஜ்ஜியம் தான். மோடி தமிழகத்திற்கு வருவதால் எந்த விதமான தாக்கமும் ஏற்படப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2024-03-03 16:07 GMT

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புதுச்சேரியில் எம் ஜி ஆர் புகைப்படத்தை பாஜக பயன்படுத்தி உள்ளது, கண்டனத்திற்குரியது உங்கள் தலைவர் மீது நம்பிக்கை இல்லையா? எங்கள் தலைவர்கள் முகத்தை காட்டி ஓட்டு வாங்க நினைக்கும் கீழ்த்தரமான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது என்றும், பாரதிய ஜனதா கட்சி சமூக வலைத்தளத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.

அதனால் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை வேண்டுமென்றால் ஒரு சதவீதம் அல்லது இரண்டு சதவீதம் வாக்கு கூடலாம் அதை தவிர்த்து வேறு ஏதும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தை பொருத்தவரை பிஜேபி ஒரு பூஜியம்; மோடி தமிழகத்திற்கு வருவதால் எந்த விதமான தாக்கமும் ஏற்படப் போவதில்லை.

இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான்.பாஜக-வை நாங்கள் ஒரு போட்டியாகவே கருதவில்லை. அவர்கள் களத்திலேயே இல்லை என்றார். செய்தியாளர் சந்திப்புக்கு இடையில் இஸ்லாமியர்கள் ஓதும் சத்தம் கேட்டது சிறிது நேரம் அமைதி காத்து அவரும் கடவுளை வணங்கினார்.

Tags:    

Similar News