திருவள்ளூரில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தடையை மீறி பொன்னேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 15:47 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணா சிலை முன்பாக பாஜகவினர் தமிழகத்தில் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கிழக்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் கள்ளச்சாராயப் பானை என எழுதி கைகளில் தூக்கியவாறு பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த பானையைப் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.