பழங்குடி மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டம்: பாஜக வேட்பாளர்

மோதிரமலை, கோதையார் பகுதியில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நந்தினி வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-15 09:30 GMT

பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி பா.ஜவேட் பாளர் நந்தினி கடையால் பஞ். மலைப் பகுதிகளில் வாக்கு கேட்டார். பேச்சிப்பாறை சிரோபாயின்ட், மோதிரமலை, கோதையார் மற்றும் அதை சார்ந்த கிராமங்களில் மக்களை அவர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மத்திய அரசின் திட்டங்கள் பழங்குடி கிராமங்களில் நேரடியாக பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் அவர் வாக்குறுதி அளித்தார். அடுத்த ஆண்டு பழங்குடி மக்களின் பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும் என பா.ஜ தேர்தல் அறிக் கையில் அறிவித்துள்ளதையும், பழங்குடி மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதையும் அவர் எடுத்துக் கூறினார்.

நேற்று மாலையில் அருமனை பஞ். மாறப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நந்தினி வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News