திராவிட இயக்கத்தின் தொட்டில் ஈரோடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு தந்தை பெரியார் பிறந்த மண், திராவிட இயக்கத்தின் தொட்டில் ஈரோடு, 2023 -2024 ம் ஆண்டிற்கு மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2024-02-08 08:18 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு அடுத்துள்ள சோலார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஈரோடு தந்தை பெரியார் பிறந்த மண் என்ற உதயநிதி ஸ்டாலின் திராவிட இயக்கதின் தொட்டில் ஈரோடு என்றார். 2023 -2024 ம் ஆண்டிற்கு மகளிர் குழுக்கு 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் , இதுவரை 25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மகளிர் சுய உதவிகள் தயாரிக்கும் பொருட்களை வாகனத்தில் எடுத்துச்சென்று விற்பனை செய்ய 100 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம் 3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிப்பொருட்களை தான் நான் பயன்படுத்துகிறேன். இந்தியாவிலேயே விளையாட்டிற்கு அதிகம் முக்கியத்துவம் தரும் மாநிலம் தமிழ்நாடு என்றார்.
Tags:    

Similar News