அரூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அரூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By : King 24x7 Website
Update: 2023-12-14 04:50 GMT
தர்மபுரி மேற்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் நேற்று அரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில தீர்மானக்குழு செயலாளர் கீரை விசுவநாதன் தலைமையில், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துக் கொண்டு பிஎல்எ2 வாக்கு சாவடி முகவர், தேர்தல் பணி, இல்லந்தோறும், இளைஞர் அணி உறுப்பினர் சேர்தல், நீட் விலக்கு கையெழுத்து பெறுதல், டிச 24, சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞர் அணி மாநாடு தொடர்பாக ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நகர செயலாளர் முல்லை ரவி, ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், சந்திரமோகன், சௌந்தரராசு, செங்கண்ணன், ரத்தினவேல் முன்னிலை வைத்தனர். நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் சூர்யா தனபால், கலைவாணி, பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், தென்னரசு, ஒவியர் குப்பன், பழனி, தேசிங்குராஜன், சண்முகநிதி, தமிழழகன், நரசிம்மன், சாமிக்கண்ணு, கவிதா, பூங்கொடி, பெருமாள், திருவேங்கடம், சேகர் உள்படபலர் கலந்து கொண்டனர். படம்& அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார்.