ஓட்டுக்காக இஸ்லாமியர்களை திமுக ஏமாற்றி வருகிறது முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு

ஓட்டுக்காக இஸ்லாமியர்களை திமுக ஏமாற்றி வருவதாக வாணியம்பாடியில் நடந்த அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

Update: 2023-10-27 03:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தலைமையில் நடைப்பெற்றது.. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி சிறையில் உள்ள 36 இஸ்லாமியர்களை விடுதலை செய்வோம் என தேர்தலில் வாக்குறுதி அளித்தார்கள் அதை நம்பி வாணியம்பாடியில் 20 ஆயிரம் வாக்குகள் திமுகவிற்கு அதிகம் செலுத்தினார்கள் ஆனால் இதுவரையில் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை மேலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து ஏமாற்றி வருகிறது என கூறுகிறார்கள் பாஜகவின் கொள்கை வேறு அதிமுகவின் கொள்கை வேறு அதையெல்லாம் முறியடித்து விட்டு வெளிப்படையாக கூட்டணி இல்லை என எடப்பாடியார் அறிவித்தார் இனிவரும் காலங்கள் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என முன்னாள் அமைச்சராகிய கே.சி வீரமணி சொல்கிறேன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கூட்டணியில் இருந்தோம் அதை உணர்ந்து தற்போது வெளியே வந்து இருக்கின்றோம் என பேசினார்.. மேலும் பேசிய அவர் குடியரசு தலைவராக அப்துல்காலம் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்க முதலில் ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா தான் ஆனால் கலாம் என்றால் கலங்கம் என்று கூறி அப்துல் கலாம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர் தான் கருணாநிதி இஸ்லாமிர்களை ஒட்டுக்காக ஏமாற்றி திமுக அவர்களை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் மேலும் தேர்தலில் அறிவித்த ஒரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என பேசினார்.. மேலும் இந்த பொதுக்கூட்ட விழாவில் அதிமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News