ராமநாதபுரத்தில் துரைவைகோ வருகை

ராமநாதபுரம் நியாய விலை கடைகளில் பாமாயிலை கொடுப்பதை நிறுத்த வேண்டும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-22 14:15 GMT

ராமநாதபுரத்தில் மதிமுக நிர்வாகியின் குடும்ப திருமண விழாவிற்கு வருகை தந்து திருமணத்தை நடத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ பேசும்போது திமுக விற்கும் மதிமுகவுக்கும் சுமுகமான உடன்பாடு உள்ளது மேலும் தேர்தல் கூட்டணி சம்பந்தமாக சுமுகமான தேர்வு ஏற்படும்.

மேலும் தமிழ்நாட்டில் நியாய விலை கடை மற்றும் அனேக இடங்களில் பாமாயில் எண்ணெயை பயன்படுத்தி வருகிறார்கள் இந்த எண்ணெய் சாப்பாட்டிற்கு உகந்ததல்ல வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இது நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் உகந்ததல்ல என்றார் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற நல்லெண்ணெய் கடலெண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களை நியாய விலைக் கடைகளிலும் விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும்.

இந்த எண்ணெய் பிரச்சனை பற்றி தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம் மீண்டும் வலியுறுத்துவோம் இதை கைவிட்டு பாமாயில் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று மீண்டும் திமுக அரசிடம் கேட்டுக் கொள்வோம். தற்போது தமிழக அரசு அறிவித்த வேளாண்மை துறை மற்றும் பட்ஜெட் மிகவும் நன்றாக இருக்கிறது அதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது என்றா.

Tags:    

Similar News