கடையாலில் உயர்கோபுர மின்விளக்கு திறப்பு

கடையாலில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உயர்கோபுர சோலார் மின்விளக்கை எம்.பி விஜய்வசந்த் திறந்து வைத்தார்

Update: 2024-03-07 13:26 GMT

உயர்கோபுர மின்விளக்கு திறந்து வைத்த எம்பி

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி முழுவதும் முக்கியமான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்,

அந்த வகையில் கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு வசதிகள் செய்து கொடுத்து வருகிறார், அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சி லுத்ரன் சர்ச் அருகிலும் தொகுதி மேம்பாட்டு நிதி தலா ரூ 7. 40 லட்சம் செலவில் உயர்கோபுர சோலார் மின்விளக்குகளை விஜய்வசந்த் எம்.பி தலைமையேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News