தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா?: அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.;

Update: 2025-03-25 09:22 GMT
தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா?: அமைச்சர் விளக்கம்

Ponmudi

  • whatsapp icon

நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்கப்படுமா? என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி, பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதுபோல் நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பனை கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க அரசு முன்வருமா? என்று ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, பனையில் இருந்து பதநீர் இறக்கும்போது கலக்க வேண்டியதை கலந்து விட்டால் போதை பொருளாக மாறிவிடும். பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் இறக்குவது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசீலிப்பார் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய அசோகன், பதநீர் 2 நாட்களை கடந்தால் கள்ளாக மாறுகிறது. இதனால் கள் என்று வழக்கு போடாமல், தற்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வழக்கு போடுகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு, வழக்கு போடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, கைது செய்பவர்கள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News