திமுக கொடியேற்று விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மதிவேந்தன்பங்கேற்பு

திருச்செங்கோட்டில் திமுக கொடியேற்று விழா - அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மதிவேந்தன் - மதுரா செந்தில் பங்கேற்பு

Update: 2023-12-19 17:24 GMT

திருச்செங்கோட்டில் திமுக கொடியேற்று விழா - அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மதிவேந்தன் - மதுரா செந்தில் பங்கேற்பு


நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு நகரக் கழகம் சார்பில் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட 60 அடி கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திமுக இரு வண்ணக் கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார், நகர திமுக செயலாளர் தா.கார்த்திகேயன், நகர மன்றத் தலைவா்கள் நளினி சுரேஷ்பாபு, மோ.செல்வராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வட்டூர் ஜி.தங்கவேல், கே.செல்வராசு. பி.பி.தனராசு, என்.நாச்சிமுத்து, ஆர்.செல்வம், ஆ.இளங்கோவன், பேரூர் கழக செயலாளர்கள் மு.திருமலை, எஸ்.பி.கார்த்திக் ராஜ், மாவட்ட துணை செயலாளர் கே.மயில்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.நடேசன், டி.ரங்கசாமி, திருச்செங்கோடு ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜவேல் (எ) ராஜபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News