தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

Update: 2023-10-31 11:19 GMT

ஒற்றுமை தின உறுதிமொழியேற்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தர்மபுரி மாவட்டம் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தலைமையில் இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தகி.சாந்தி தலைமையேற்று, தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியான "இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், ' இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார் உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்." என்ற உறுதிமொழியினை வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் டி.ஆர்.கீதாராணி, வில்சன் ராஜசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அருண்மொழித்தேவன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News