ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் புகைப்பட கண்காட்சி

ராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மூன்றாண்டு சாதனை திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-03-12 12:41 GMT

புகைப்பட கண்காட்சியை ரசித்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் தலைமையேற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கான திட்டங்கள் அறிவித்து கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்த புகைப்படம் மற்றும் உலக நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த புகைப்படங்கள் தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோர்கள் சந்தித்த புகைப்படங்கள் தமிழ்நாடு முதலைைமச்சர் பயனாளிகள்,

பொதுமக்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வார காலம் நடக்கும் இப்புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது மட்டுமின்றி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.டி.பிரபாகரன் , இராமநாதபுரம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலர் லெ.பாண்டி ,

இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் , உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News