கல்லூரி மாணவர்களுக்கு போஸ்டர் தயாரித்தல் போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு போஸ்டர் தயாரித்தல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-29 07:50 GMT

மாணவர்களுக்கு போட்டி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போஸ்டல் தயாரித்தல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது . இப்போட்டியின் தலைப்பு கலைஞரும் நெல்லை மாவட்டமும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்ட வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆற்றிய பணிகள் தொடர்பான போஸ்டர்களை தயாரிக்க வேண்டும். போஸ்டர்களின் அளவு 4 X 3 அளவில் இருக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் தயாரித்த போஸ்டர்களை 03-11- 2023 அன்று மாலை 5 மணிக்குள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் 04-11- 2023 அன்று நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7502433751 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி இன்று வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News