சுவாமிமலையில் பேரூர் திமுக சார்பில் பொதுக் கூட்டம்

சுவாமிமலை பேரூர் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-16 10:34 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சுவாமிமலை பேரூர் திமுக மற்றும் இளைஞரணி சார்பில் பெரியகடை வீதியில் தேரடி அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவகுமார் வரவேற்றார் பேரூர் கழகச் செயலாளர் S.M.S பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாநில கலவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் M.Pவழிகாட்டுதலின்படி. கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் சிறப்புரையாற்றினார் வழங்கினார்கள்.

நிகழ்வில் குத்தாலம் பி.கல்யாணம் தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான பம்பப்படையூர் S.K.முத்துசெல்வம் தஞ்சை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் கோவி.அய்யாராசு,மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்திராபதி,மாநில அயலக அணி துணை செயலாளர் இரா.விஜயன்,வழக்கறிஞர் அணி பா.விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி தேவஸ்ரீகண்டன்,

பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெமினி,லட்சுமி பிரியா கோபால்,குணாளன்,ராதிகா ஜெய்சங்கர்,கலா ராம்மூர்த்தி.பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். பேரூர் கழகத் துணை செயலாளர் P.K கோபால் நன்றி உரையாற்றினார்

Tags:    

Similar News