சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி?

திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-10 03:02 GMT

தொல். திருமாவளவன் 

தி.மு.க - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட்டு விசிக வென்றது. கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News