வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்த உத்தரவு!!
By : King 24x7 Desk
Update: 2024-05-09 13:31 GMT
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இவை கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணும் மையங்களில் அடுத்தடுத்து சிசிடிவி கேமராக்கள் பழுதாவது தொடர்ந்து வருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.