சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு; அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!
By : King 24x7 Desk
Update: 2024-09-27 13:36 GMT
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். சித்ரா கடந்த 2020 டிசம்பரில் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். சித்ரா மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டது.