கோடநாடு வழக்கு: சயான், வாளையாறு மனோஜுக்கு உதகை நீதிமன்றம் சம்மன்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-27 13:39 GMT
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் அக்.16-ல் நேரில் ஆஜராக உதகை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கோடநாடு வழக்கின் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள உதகையைச் சேர்ந்த தனியார் காட்டேஜ் உரிமையாளரை மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் இரவு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.