வெங்கமெடு பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

வெங்கமெடு பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

திருடப்பட்ட கடை

வெங்கமெடு பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருடியுள்ளனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் உள்ள திட்ட சாலையில் பத்மநாபன் என்பவர் சத்யா மளிகை கடை என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளார்.

கடையை பூட்டிவிட்டு. இதனை அறிந்த மர்ம நபர்கள், நேற்று இரவு கடையின் பூட்டை உடைத்து, ஷட்டரை தூக்கி விட்டு, உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.7000-த்தை களவாடி சென்றுள்ளனர்.

வழக்கம்போல இன்று கடை திறக்கச் சென்ற பத்மநாபன், கடையின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்த போது பணம் களவாடப்பட்டது தெரியவந்தது. எனவே இது குறித்து வெங்கமேடு காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, கடையின் பூட்டை உடைத்து, களவாடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story