அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி ஆற்றில் 7,100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரூர் மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது அமராவதி அணை. இந்த அமராவதி அணையின் கடைமடை பகுதி கரூர் மாவட்டமாகும். அமராவதி அணையின் நீர் கொள்ளளவு திறன் 90 அடி ஆகும். தற்போது இந்த அணையில் 89.14 அடி நீர் இருப்பு உள்ளது. அதே சமயம், அணைக்கு நீர் வரத்து 4548 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து மாலை 4 மணி நிலவரப்படி 7,100- கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது நாளை கரூர் பகுதிக்கு வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே,கரூர் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சற்று முன் அணை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story