கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காவலர்கள் குவிப்பால் பரபரப்பு

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காவலர்கள் குவிப்பால் பரபரப்பு நிலவியது.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காவலர்கள் குவிப்பால் பரபரப்பு. தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வப் பெருந்தகை இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வர உள்ளார். இதில் முதல் நிகழ்ச்சியாக கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இதே காலை 10 மணிக்கு ஜாக்டோ- ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அனுமதி கேட்டு, மறுக்கப்பட்டுள்ளது காவல்துறையால். இரண்டு நிகழ்ச்சிகளும், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நடக்க இருப்பதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக, கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

Tags

Next Story