பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.

ஆண்டாங்கோவில் புதூர் காலனி அருகே பணம் வைத்து சூதாடிய, மூன்று பேர் கைது.

ஆண்டாங்கோவில் புதூர் காலனி அருகே பணம் வைத்து சூதாடிய, மூன்று பேர் கைது. கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆண்டாங்கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாத வடிவேலுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில்,ஆண்டாங் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள புதூர் காலனி ஆலமரம் அருகே பணம் வைத்த சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆண்டாங்கோவில் புதூர் காலனி பகுதி சேர்ந்த பூபதி, முருகேசன், விஜய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 410 யும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து கரூர் மாநகர காவல் துறையினர்.நடவடிக்கை மேற்கொண்டனர்.


Tags

Next Story