மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுபாட்டு அறை 100க்கு வந்த தகவலால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனையில் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மதுபோதை ஆசாமியை கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100ஐ தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தரப்பட்டது. மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மெட்டல் டிடக்டர் கருவிக்கொண்டு முழுசோதனை செய்தனர். எந்தவித தடயமும் கிடைக்கவில்லை வெடிகுண்டு புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனிடையே போலீசார் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியை சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்தது. மதுபோதையில் இருந்த கணேசனை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபோதையில் அடிக்கடி ரகளையில் ஈடுபடும் கணேசன் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story