உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த மூதாட்டி பலி

உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த மூதாட்டி பலி
மயிலாடுதுறை அருகே நீடூர் கொற்றவை நல்லூரை சேர்ந்த அஞ்சம்மாள் நேற்று மாலை மாடு ஓட்டச் சென்றபோது மின்சாரம் தாக்கி பலியானார்
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே கொற்றவநல்லூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி அஞ்சாயாள்(59) அப்பகுதியில் உள்ள வயலில் கட்டியுள்ள மாட்டை ஓட்டிவர சென்றபோது வயலில் அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்ததில் மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்ப இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
Next Story