ஒன்றிய அரசு பட்ஜெட் நகல் கிழித்தெரித்து போராட்டம்

ஒன்றிய அரசு பட்ஜெட் நகல் கிழித்தெரித்து போராட்டம்
மயிலாடுதுறையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து எரிந்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் கிட்டபாங்காடி முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த சலுகைகளும் அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்ஜெட் நகலை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து கிழித்து வீசி எறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இறுதியாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Next Story