நகராட்சி பள்ளி இவ்வாண்டு தேர்ச்சி அதிகம் அடுத்தாண்டு மேலும் உயரவேண்டும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 559 அரசு பள்ளிகளில் பயிலும் 44,816 மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024 2025 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விலையில்லா சீருடை வழங்கும் விழா மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை myமாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை வகித்து மாவட்டத்தில் உள்ள 559 பள்ளிகளில் பயிலும் 22,435 மாணவர்கள் 22,381 மாணவிகள் என மொத்தம் 44,816 மாணாக்கர்களுக்கு விலை இல்லா சீருடைகளை வழங்கி பேசினார், . இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆர்டிஓ விஷ்ணுபிரியா தலைமை ஆசிரியர் அன்புச்செழியன், நகரமன்றத் துணைத் தலைவர் எஸ் எஸ் குமார், நகர்மன்ற உறுப்பினர் சம்பத், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மாசிலாமணி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story