மயிலாடுதுறை நீதிமன்றம் தொல் திருமாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது

மயிலாடுதுறை நீதிமன்றம் தொல் திருமாவுக்கு பிடிவாரண்ட்  பிறப்பித்தது
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கிற்கு ஆஜராகாத விடுதலை சிறுத்தை மாநில தலைவர் தொல் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது
மயிலாடுதுறையில்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்‌.விஜயகுமாரி உத்தரவு. வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பி.டி.வாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்து இவ்வழக்கினை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story