மாற்றுத் திறனாளிகள் கடலில் நீச்சல் பயணம்

ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா வரை 604 கி.மீ தொடர் நீச்சல் பயணம் மேற்கொண்டு மயிலாடுதுறை வந்தடைந்த மாற்றுத்திறனாளிகள். தரங்கம்பாடியிலிருந்து மீண்டும் புறப்பட்டு சென்றனர்
மயிலாடுதுறை 09.08.2024 மாற்றுத்திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தும் வகையில் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா வரை 604 கி.மீ தொடர் நீச்சல் பயணம் மேற்கொண்டு மயிலாடுதுறை வந்தடைந்த மாற்றுத்திறனாளிகள். 11 வயது மாணவன் நீச்சல் அடித்த அசத்தல், முற்றிலும் கண் பார்வையற்ற மாணவரும் பயிற்றுநரின் குரல் வரும் திசையில் பயணித்து கவனம் ஈர்த்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை செனாய் நகரில் உள்ள ஸ்டேட் டெவலப்மென்ட் அதாரிட்டி ஆஃப் தமிழ்நாடு (எஸ்டிஏடி) உடன் இணைந்து வேவ் ரைடர்ஸ் விளையாட்டுக்குழு உலக சாதனை முயற்சியாக நடத்தும் இந்த பயணத்தில், மாணவர்கள் 15 பேர் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீட்டர் தொடர் நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் கடந்த 5-ஆம் தேதி கடற்பயணத்தை தொடக்கிய இவர்கள் நாளொன்றுக்கு 50 கிமீ வரை 12 மணி நேரம் பயணித்து, நேற்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடைந்தனர். அங்கிருந்து இன்று காலை கடல்வழியாக பழையாறு நோக்கி புறப்பட்டனர். 10 நாள் முடிவில் இவர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பகுதியில் தங்கள் சாதனையை நிறைவு செய்ய உள்ளனர். இந்த நீச்சல் பயணத்தில் 11 வயது மாணவர் சித்தார்த், முற்றிலும் பார்வைத்திறன் அற்ற மாணவர் லக்ஷய்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த உலக சாதனை வேர்ல்டு ரெக்கார்ட் யூனியன் பதிவு செய்யப்படவுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் ஆகஸ்ட் 15 அன்று, 15 குழந்தைகள் இணைந்து மாபெரும் உலக சாதனை புரிய இருக்கிறார்கள். கடற்பயணம் மேற்கொண்டுள்ள மாணவர்களுடன், அவர்களது பெற்றோர், மருத்துவக்குழுவினர் ஆகியோர் பைபர் படகில் உடன் சென்று அவர்களை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர்.
Next Story