மூவலூர் மார்க்க சகாயேஸ்வர ஆலயத்தில் திருவிளக்கு பூஜையில் பக்தைகள்

மயிலாடுதுறை அருகே மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் குடும்பம் செழிக்க பெண்கள் குத்து விளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் வழிகாட்டும் வள்ளலாக திகழும் சௌந்தரனாயகி மங்களாம்பிகை சமேத மார்க்க சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 35ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு வைத்து குடும்பம் செழிக்கவும், மாங்கல்ய பலம் வேண்டியும், கன்னிப் பெண்கள் திருமண வரம் வேண்டியும், குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் வழிபாடு நடத்தினர்.
Next Story