மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி. ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் சட்டம் ஒழுங்கை காப்பற்றுவதற்கும் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
. மயிலாடுதுறை மாவட்டம் துவங்கி ஐந்தாவது எஸ்பியாக ஜி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் உருவான 2020இல் ஸ்ரீ நாதா முதல் எஸ்பியாக பொறுப்பேற்றார் அதன் பிறகு சுகுணா சிங், என் எஸ் நிஷா, நான்காவது எஸ்பியாக கே. மீனா (14-8-23) கடந்த ஓர் ஆண்டாக பதவி வகித்தார். மீனாவையடுத்து இன்று ஜி. ஸ்டாலின் மாவட்டத்தின் ஐந்தாவது எஸ்.பியாக பொறுப்பு ஏற்றார். முன்னதாக எஸ்பி மீனா தனது பொறுப்புகளை புதிய எஸ் பி ஜி ஸ்டாலினிடம் வழங்கினார். மயிலாடுதுறை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அதிக கவனம் செலுத்தப்படும், மேலும் மதுவிலக்கு அமல் படுத்துவதில் தீவிரம் காட்டப்படும் என்றார்.
Next Story